தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3095

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 குமுஸ் கடமையை நிறைவேற்றுவது (போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து ஐந்திலொரு பங்கை இஸ்லாமிய அரசின் சிறப்பு நிதிக்குச் செலுத்துவது) மார்க்கத்தில் உள்ளதாகும்.

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் (நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (எங்களின்) இந்தக் கிளை ‘ரபீஆ’ குலத்தைச் சேர்ந்ததாகும். எங்களுக்கும் உங்களுக்குமிடையே ‘முளர்’ குலத்து நிராகரிப்பாளர்கள் (நாம் ஒருவரையொருவர் சந்திக்கத்) தடையாக உள்ளனர். எனவே, (போரிடுவதும் கொள்ளையும் வழிப்பறியும் அனைவராலும் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களிலே தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் தங்களிடம் வந்து சேர முடியாதவர்களாயிருக்கிறோம்.

எனவே, நாங்கள் எடுத்து நடக்கவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கிவிட்ட)வர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்ற ஒரு விஷயத்தை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்கு விஷயங்களை உங்களுக்குக் கட்டளையிட்டு நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கிறேன்.

நான் கட்டளையிடுபவை:

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; ‘வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமிலர்’ என்று சாட்சியம் மொழிவது… (இதைச் சொல்லியபடி) நபி(ஸல்) அவர்கள் தம் கையால் (எண்ணிக்) கணக்கிட்டார்கள்…

தொழுகையை (அதனுடைய வேளையில் முறைப்படி ஜமாஅத்துடன்) நிலை நாட்டுவது,

ஸக்காத் கொடுப்பது,

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது,

உங்களுக்குக் கிடைக்கும் போர்ச் செல்வங்களிலிருந்து ஐந்திலொரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்தி விடுவது ஆகியன.

மேலும், (மது வைத்திருக்கப் பயன்படுகின்ற) துப்பா – சுரைக்காய்க் குடுவைகள்; மற்றும் நக்கீர் – பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப் பீப்பாய்கள், முஸஃப்பத்- தார் பூசப்பட்ட பாத்திரங்கள், மற்றும் அல் – ஹன்த்தம் – மண்சாடிகள் ஆகியவற்றை (பயன்படுத்த வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கிறேன்’ என்று கூறினார்கள்.

Book : 57

(புகாரி: 3095)

بَابٌ: أَدَاءُ الخُمُسِ مِنَ الدِّينِ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ

قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا هَذَا الحَيَّ مِنْ رَبِيعَةَ، بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، فَلَسْنَا نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي الشَّهْرِ الحَرَامِ، فَمُرْنَا بِأَمْرٍ نَأْخُذُ بِهِ وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا، قَالَ: ” آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، الإِيمَانِ بِاللَّهِ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، – وَعَقَدَ بِيَدِهِ – وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَصِيَامِ رَمَضَانَ، وَأَنْ تُؤَدُّوا لِلَّهِ خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ: عَنِ الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالحَنْتَمِ، وَالمُزَفَّتِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.