தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3355

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 முஜாஹித்(ரலி) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) இருக்கும்போது மக்கள், ‘தஜ்ஜாலின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (நிராகரிப்பவன்) என்றோ ‘காஃப், ஃபா, ரா’ என்றோ எழுதப்பட்டிருக்கும். (என்பது உண்மையா?)’ என்று பேசிக் கொண்டார்கள்.

அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘நான் இப்படிச் செவியுறவில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘இப்ராஹீம்(அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்) என்றால் உங்கள் தோழரான என்னைப் பாருங்கள்.

மூஸா(அலை) அவர்களோ சுருள்முடி கொண்டவர்களாகவும், (கோதுமை போன்ற) பழுப்பு நிறம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிகப்பு நிற ஒட்டகத்தின் மீது சவாரி செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது ‘அல் அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது’ என்று கூறினார்கள்’ எனச் சொல்ல கேட்டேன்.
Book :60

(புகாரி: 3355)

حَدَّثَنِي بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ

أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَذَكَرُوا لَهُ الدَّجَّالَ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرٌ، أَوْ ك ف ر، قَالَ: لَمْ أَسْمَعْهُ، وَلَكِنَّهُ قَالَ: «أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ، وَأَمَّا مُوسَى فَجَعْدٌ آدَمُ عَلَى جَمَلٍ أَحْمَرَ مَخْطُومٍ بِخُلْبَةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ انْحَدَرَ فِي الوَادِي»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.