தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3794

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 யஹ்யா இப்னு ஸயீத்(ரலி) அறிவித்தார்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவாக்ள் என்னுடன் பயணமாம் வலீத் இப்னு அப்தில் மலிக்கைச் சந்தித்தபோது (வலீத் இடம்) கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக எங்களுக்குத் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், ‘எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் இதே போன்று மானியம் தந்தாலே தவிர நாங்கள் இதை ஏற்க மாட்டோம்’ என்று கூறினர். ‘நீங்கள் இதை ஏற்க மாட்டீர்கள் என்றால், என்னை (மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் தாடாகத்தின் அருகே) சந்திக்கம் வரை பொறுத்திருங்கள். ஏனெனில், எனக்குப் பின் (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை உங்களுக்கு நேரும்’ என்று கூறினார்கள்.
Book :63

(புகாரி: 3794)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، حِينَ خَرَجَ مَعَهُ إِلَى الوَلِيدِ قَالَ

دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَنْصَارَ إِلَى أَنْ يُقْطِعَ لَهُمُ البَحْرَيْنِ، فَقَالُوا: لاَ إِلَّا أَنْ تُقْطِعَ لِإِخْوَانِنَا مِنَ المُهَاجِرِينَ مِثْلَهَا، قَالَ: «إِمَّا لاَ، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي، فَإِنَّهُ سَيُصِيبُكُمْ بَعْدِي أَثَرَةٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.