தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3823

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜரீர்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் ‘துல்கலஸா’ என்னும் ஆலயம் ஒன்று இருந்தது. அது யமன் நாட்டு கஅபா.. அல்லது ஷாம் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்டு வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீ விடுவித்து விடுவாயா?’ என்று கேட்டார்கள். எனவே நான் ‘அஹ்மஸ்’ என்னும் (என்) குலத்தாரிலிருந்து நூற்றி ஐம்பது குதிரை வீரர்களுடன் அதை நோக்கிப் புறப்பட்டேன். அதை நாங்கள் உடைத்து விட்டோம். அதனருகே இருந்த(பகை)வர்களை நாங்கள் கொன்று விட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தோம். அப்போது, நபி(ஸல்) அவர்கள் எங்களுக்காகவும் ‘அஹ்மஸ்’ குலத்தாருக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.
Book :63

(புகாரி: 3823)

وَعَنْ قَيْسٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ

كَانَ فِي الجَاهِلِيَّةِ بَيْتٌ، يُقَالُ لَهُ ذُو الخَلَصَةِ وَكَانَ يُقَالُ لَهُ: الكَعْبَةُ اليَمَانِيَةُ أَوِ الكَعْبَةُ الشَّأْمِيَّةُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ أَنْتَ مُرِيحِي مِنْ ذِي الخَلَصَةِ» قَالَ: فَنَفَرْتُ إِلَيْهِ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ، قَالَ: فَكَسَرْنَا، وَقَتَلْنَا مَنْ وَجَدْنَا عِنْدَهُ، فَأَتَيْنَاهُ فَأَخْبَرْنَاهُ، فَدَعَا لَنَا وَلِأَحْمَسَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.