தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4506

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத் தொடர்).
 நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி), (திருக்குர்ஆன் 02:184வது வசனத்தில் ‘அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்’ என்பதன் மூலத்தை) ‘ஃபித்யத்து தஆமி மஸாகீன’ என்று (‘ஏழைகள்’ எனப் பன்மையாக) ஓதிக்காட்டி ‘இது, சட்டம் மாற்றப்பட்டுவிட்ட வசனமாகும்’ என்று கூறினார்கள்.
Book : 65

(புகாரி: 4506)

بَابُ {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} [البقرة: 185]

حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّهُ قَرَأَ: (فِدْيَةُ طَعَامِ مَسَاكِينَ) قَالَ: «هِيَ مَنْسُوخَةٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.