தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5607

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பராஉ(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் தம்முடன் அபூ பக்ர்(ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு மக்காவிலிருந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து) வந்தார்கள். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை) அபூ பக்ர்(ரலி) கூறினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாகத்துடன் இருந்தபோது நாங்கள் ஓர் ஆட்டிடையனைக் கடந்து சென்றோம். அப்போது நான் (ஆட்டிலிருந்து) ஒரு கிண்ணத்தில் சிறிதுப் பால் கறந்(து நபியவர்களுக்குக் கொடுத்)தேன். நான் திருப்தியடையும் வரை அதை நபி(ஸல்) அவர்கள் பரும்னார்கள். (எங்களைப் பிடிக்க) சுராக்கா இப்னு ஜுஉஷும் ஒரு குதிரையில் எங்களை நோக்கி வந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது சுராக்கா தனக்கெதிராகப் பிரார்த்திக்க வேண்டாமென்றும், தான் திரும்பச் சென்றுவிடுவதாகவும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள்.29

Book :74

(புகாரி: 5607)

حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ وَأَبُو بَكْرٍ  مَعَهُ، قَالَ أَبُو بَكْرٍ: «مَرَرْنَا بِرَاعٍ وَقَدْ عَطِشَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَحَلَبْتُ كُثْبَةً مِنْ لَبَنٍ فِي قَدَحٍ، فَشَرِبَ حَتَّى رَضِيتُ، وَأَتَانَا سُرَاقَةُ بْنُ جُعْشُمٍ عَلَى فَرَسٍ فَدَعَا عَلَيْهِ، فَطَلَبَ إِلَيْهِ سُرَاقَةُ أَنْ لاَ يَدْعُوَ عَلَيْهِ وَأَنْ يَرْجِعَ، فَفَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.