தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4293

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு செய்த உபதேசங்கள் பின்வருமாறு:

அனஸே! நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாக்கப்படும்.

அனஸே! நீ லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன்னுள்ள நல்லோர்களின் தொழுகையாகும்.

அனஸே! நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக்கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

அனஸே! நீ மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

அனஸே! நீ இரவிலும், பகலிலும் அதிகமாக தொழுதுக்கொள். அதனால் உன்னை பாதுகாக்கும் வானவர்கள் உன்னை நேசிப்பர்.

அனஸே! நீ தூங்கும் போது உளூவுடன் தூங்கு. அதனால் அந்நிலையில் நீ மரணித்தால் ஷஹீத் எனும் அந்தஸ்தை அடைவாய்.

அனஸே! நீ சிறுவர்கள் மீது அன்பு செலுத்து, பெரியோர்களுக்கு மரியாதை கொடு.

(abi-yala-4293: 4293)

حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي خَلِيفَةَ، عَنْ ضِرَارِ بْنِ مُسْلِمٍ قَالَ: سَمِعْتُهُ ذَكَرَهُ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَنَسُ أَسْبِغِ الْوُضُوءَ يُزَدْ فِي عُمُرِكَ، يَا أَنَسُ صَلِّ صَلَاةَ الضُّحَى؛ فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ مِنْ قَبْلِكَ، يَا أَنَسُ سَلِّمْ عَلَى أَهْلِ بَيْتِكَ تَكْثُرْ حَسَنَاتُكَ، يَا أَنَسُ سَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ، يَا أَنَسُ أَكْثِرِ الصَّلَاةَ بِاللَّيْلِ وَالنَّهَارِ يُحِبَّكَ حَافِظَاكَ، يَا أَنَسُ بِتْ وَأَنْتَ طَاهِرٌ، فَإِنْ مُتَّ مُتَّ شَهِيدًا، يَا أَنَسُ وَقِّرِ الْكَبِيرَ، وَارْحَمِ الصَّغِيرَ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4293.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4231.




إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات وصدوقيين عدا عمر بن أبي خليفة العبدي وهو مقبول

மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.