தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-428

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பல செய்திகளை) எனக்கு கற்றுத் தந்தார்கள். மேலும் ஐந்து நேரத் தொழுகைகளை பேணிக் கொள்க! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் நிச்சயமாக இந்த நேரங்கள் எனக்கு அதிகமான வேலைகள் உள்ள நேரங்களாகும். நான் எதைச் செய்தால் எனக்கு போதுமானதாகுமோ அத்தகைய பொதுவான ஓர் உத்தரவை இடுங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், இரு அஸீர் (தொழுகை)களை நீ பேணிக் கொள்க என்று சொன்னார்கள். இரு அஸீர் (தொழுகை)கள் எங்களுடைய பேச்சு வழக்கில் இல்லாததால் இரு அஸீர்கள் என்றால் என்ன? என்று கேட்டேன். அது சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற இந்த செய்தியும் அவர்கள் கற்றுத் தந்தவற்றில் உள்ளதாகும்.

(அபூதாவூத்: 428)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ فَضَالَةَ، عَنْ أَبِيهِ، قَالَ

عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ فِيمَا عَلَّمَنِي «وَحَافِظْ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ»، قَالَ: قُلْتُ: إِنَّ هَذِهِ سَاعَاتٌ لِي فِيهَا أَشْغَالٌ فَمُرْنِي بِأَمْرٍ جَامِعٍ إِذَا أَنَا فَعَلْتُهُ أَجْزَأَ عَنِّي، فَقَالَ: «حَافِظْ عَلَى الْعَصْرَيْنِ» وَمَا كَانَتْ مِنْ لُغَتِنَا، فَقُلْتُ: وَمَا الْعَصْرَانِ؟، فَقَالَ: «صَلَاةُ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَصَلَاةُ قَبْلَ غُرُوبِهَا»


AbuDawood-Tamil-428.
AbuDawood-Shamila-428.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.