Author: Farook

Musnad-Ahmad-12451

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

12451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا، فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا، وَلَا يُفَرِّقَ بَيْنَ أَيْدِيهِمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا»


Kubra-Bayhaqi-13573

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13573. …


قِيلَ: يَا رَسُولَ اللهِ أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ إِذَا الْتَقَيْنَا؟ قَالَ: ” لَا ” قَالَ: فَيَلْتَزِمُ بَعْضُنَا بَعْضًا؟ قَالَ: ” لَا ” قَالَ: فَيُصَافِحُ بَعْضُنَا بَعْضًا؟ قَالَ: ” نَعَمْ


Abi-Yala-4289

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4289. …


قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ إِذَا الْتَقَيْنَا؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَيَلْتَزِمُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا»، قَالَ: فُيُصَافِحُ بَعْضُنَا بَعْضًا؟، قَالَ: «نَعَمْ»


Abi-Yala-4287

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4287. …


: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ إِذَا الْتَقَيْنَا؟ قَالَ: «لَا»، قَالَ: فَيَلْتَزِمُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا»، قَالَ: فُيُصَافِحُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «تَصَافَحُوا»


Ibn-Majah-3702

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3702. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நாங்கள் நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்றுக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டித் தழுவலாமா ? என்றுக் கேட்டோம். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். என்றாலும் முஸாஃபஹா – கரம் பற்றி வாழ்த்து தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

 


قُلْنَا يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا» . قُلْنَا أَيُعَانِقُ بَعْضُنَا بَعْضًا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَصَافَحُوا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25719

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

25719. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிதோழர்கள் (சந்தித்துக் கொள்ளும்) போது முஸாஃபஹா செய்வார்கள்.

அறிவிப்பவர்: கதாதா (ரஹ்)


«أَنَّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَافِحُ بَعْضُهُمْ بَعْضًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25718

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25718. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதரே ! எங்களில் சிலர் சிலரை சந்திக்கும் போது முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.


قُلْنَا: «يَا رَسُولَ اللَّهِ، أَيُصَافِحُ بَعْضُنَا بَعْضًا؟» قَالَ: «نَعَمْ»


Shuabul-Iman-8559

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8559. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நான் நபித்தோழர் ஒருவரிடம்,  ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவரை முத்தமிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் கூடாது என்றார்.  அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டேன். அதற்கும் அவர் கூடாது என்றார். முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அனுமதி அளித்தார்.

 

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார் :

இது ஹன்ளலா அஸ்ஸதூஸி தனித்து அறிவிக்கும் செய்தி. இவர் கடைசி காலத்தில் மூளை குழம்பிவிட்டார். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

 

 


سَأَلْتُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَلْقَى الرَّجُلَ أَيُقَبِّلُهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: أَفَيَنْحَنِي لَهُ؟، قَالَ: ” لَا “. وَسُئِلَ عَنِ الْمُصَافَحَةِ فَرَخَّصَ فِيهَا.


Shuabul-Iman-8558

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8558. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டித் தழுவலாமா ? என்று அவர் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள்.


قِيلَ: يَا رَسُولَ اللهِ يَنْحَنِي أَحَدُنَا لِأَخِيهِ إِذَا لَقِيَهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: فَيَلْتَزِمُهُ؟ قَالَ: ” لَا


Musnad-Ahmad-13044

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13044. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

ஒருவர் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் நண்பனைச் சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டியணைத்து முத்தம் தரலாமா? என்று அவர்கள் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவருடையை கையைப் பிடித்து முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் அவர் விரும்பினால் (செய்யலாம்) என்றார்கள்.


قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَحَدُنَا يَلْقَى صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا» . قَالَ: فَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ؟ قَالَ: «لَا» . قَالَ: فَيُصَافِحُهُ؟ قَالَ: «نَعَمْ إِنْ شَاءَ»


Next Page » « Previous Page