தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1261

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 (பெண்)சடலத்தின் உடம்பில் துணியைச் சுற்றுவது எப்படி?

(கஃபனுடைய) ஐந்து துணிகளில் ஒன்றைக் கொண்டு மேலாடைக்கு உள்ளே தொடைகளையும் இடுப்பையும் சுற்றிக் கட்ட வேண்டும் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

 இப்னு ஸிரின் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம்) உடன் படிக்கை செய்திருந்த அன்ஸாரிப் பெண்மணியான உம்மு அதிய்யா(ரலி) தம் மகனைத் தேடி பஸராவுக்குச் வந்தார். மகனைச் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் எங்களிடம் சொன்னதாவது. ‘நபி(ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ‘மய்யித்தை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டுங்கள்; மேலும் கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடித்ததும் தம் கீழாடையைத் தந்து. ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்’ என்றும் கூறினார்கள். எதையும் கூறவில்லை.
நபி(ஸல்) அவர்களின் புதல்விகளுள் இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று அய்யூப் கூறுகிறார்.

மய்யித்துக்கு இடுப்பில் துணியைக் கட்டத் தேவையில்லை; ஆயினும் சுற்ற வேண்டும் என்றே இப்னு ஸிரீன் கட்டளையிட்டு வந்தார்.
Book : 23

(புகாரி: 1261)

بَابٌ: كَيْفَ الإِشْعَارُ لِلْمَيِّتِ؟

وَقَالَ الحَسَنُ: «الخِرْقَةُ الخَامِسَةُ تَشُدُّ بِهَا الفَخِذَيْنِ، وَالوَرِكَيْنِ تَحْتَ الدِّرْعِ»

حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ أَيُّوبَ، أَخْبَرَهُ قَالَ: سَمِعْتُ ابْنَ سِيرِينَ، يَقُولُ

جَاءَتْ أُمُّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ مِنَ اللَّاتِي بَايَعْنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدِمَتِ البَصْرَةَ تُبَادِرُ ابْنًا لَهَا، فَلَمْ تُدْرِكْهُ، فَحَدَّثَتْنَا، قَالَتْ: دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي» قَالَتْ: فَلَمَّا فَرَغْنَا أَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلاَ أَدْرِي أَيُّ بَنَاتِهِ، وَزَعَمَ أَنَّ الإِشْعَارَ: الفُفْنَهَا فِيهِ، وَكَذَلِكَ كَانَ ابْنُ سِيرِينَ يَأْمُرُ بِالْمَرْأَةِ أَنْ تُشْعَرَ، وَلاَ تُؤْزَرَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.