பாடம்: 4
உளூ முறிந்ததாக உறுதியாகத் தெரியாத வரை சந்தேகப்பட்டு மீண்டும் உளூ செய்யத் தேவையில்லை.
‘தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, ‘நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும் வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்’ என்று அவர்கள் கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 4
(புகாரி: 137)بَابُ مَنْ لاَ يَتَوَضَّأُ مِنَ الشَّكِّ حَتَّى يَسْتَيْقِنَ
حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ
أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «لاَ يَنْفَتِلْ – أَوْ لاَ يَنْصَرِفْ – حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»
Bukhari-Tamil-137.
Bukhari-TamilMisc-137.
Bukhari-Shamila-137.
Bukhari-Alamiah-134.
Bukhari-JawamiulKalim-135.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . இப்னுல் மதீனீ-அலீ பின் அப்துல்லாஹ்
3 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா
4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்
5 . ஸயீத் பின் முஸய்யிப் பின் ஹஸ்ன்
6 . ——-
இரண்டாவது வழியில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . இப்னுல் மதீனீ-அலீ பின் அப்துல்லாஹ்
3 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா
4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்
5 . அப்பாத் பின் தமீம்-மாஸினீ
6 . அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)-அல்அன்ஸாரீ
அஸ்ஸலாமு வஅலைக்கும்(வரஹ்) இதில் வருகின்ற புஹாரி 137ம் ஆங்கிலத்தில் பதிவாகிறிகின்ற புஹாரி 137ம் வெவ்வேறாக உள்ளதே, என்ன காரணம்? ஆங்கிலத்தில் உள்ளதை கீழே பதிவு செய்திருக்கிறேன்.
(4) CHAPTER. One should not repeat
ablution if in doubt unless and until he is
convinced (that he has lost his ablution by
having Hadath).
137. Narrated ‘Abbãd bin Tamim: My uncle asked Allah’s Messenger .
about a person who imagined to have passed
wind during Salat (prayer). Allah’s
Messenger
replied: “He should not
leave his Salat unless he hears sound or
smells something.”
வ அலைக்கும் ஸலாம் (வரஹ்). கருத்து ஒன்றே. Narrated ‘Abbãd bin Tamim: —
அப்பாத் அவர்கள் தனது தந்தையின் சகோதரர்-அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். நமது சைட்டில் நபித்தோழரை மட்டும் கூறியுள்ளோம். இதைத் தானே நீங்கள் கேட்கிறீர்கள்.
அஸ்ஸலாமு வ அ்லைக்கும்(வரஹ்)
இல்லை, நான் கேட்பது. மொழி பெயர்க்கும்போது தமிழ் அல்லது ஆங்கிலமாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் மாமா கேட்டதாகவும், தமிழில் தான் கேட்டதாகவும் வருகிறதே அந்த குழப்பம்தான்.