பாடம்: 55
மழைநீர், வாய்க்கால் நீர் ஆகியவற்றால் நீர் பாய்ச்சப்படும் நிலங்களின் விளைச்சலுக்கு, பத்தில் ஒரு பாகம் ஸகாத் உண்டு என்பதும், தேனுக்கு ஸகாத் எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்ற உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் கருத்தும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மழை நீராலோ, ஊற்று நீராலோ, தானாகப் பாயும் நீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பாகம் ஸகாத் கொடுக்க வேண்டும். ஒட்டகம் (போன்றவற்றின்) மூலம் நீர் இறைத்து விளைவிக்கப்பட்டவற்றில் பத்தில் பாதி பாகம் (அதாவது இருபதில் ஒரு பாகம்) ஸகாத் கொடுக்க வேண்டும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அபூஅப்துல்லாஹ்-புகாரி இமாம் கூறுகிறார்:
விளைபொருட்களில் தரப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு எந்த அளவுள்ள விளை பொருட்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்று இப்னு உமர் (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்தாமல் போய்விட்டது. எந்த அளவுள்ள விளை பொருட்களில் ஸகாத் கடமையாகும் என்று தெளிவுபடுத்திக் கூறுகிற அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிற (புகாரி-1484) இல் வரும் ஹதீஸ், இந்த இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது.
ஒருவர் கூறுவதை விட அதிகமான விபரத்தை நம்பகமான மற்றொருவர் கூறினால் அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படும். நம்பகமானவர்களால் அறிவிக்கப்படும் தெளிவான ஹதீஸ் தெளிவற்ற ஹதீஸுக்கு (விளக்கமளித்து) தீர்மானமான ஒரு கருத்தைத் தரும்.
இது (எதைப் போன்றதெனில்) ‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை’ என்ற ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸைவிட்டுவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்கள்’ என்று பிலால் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதைப் போன்றதாகும்.
அத்தியாயம்: 24
(புகாரி: 1483)بَابُ العُشْرِ فِيمَا يُسْقَى مِنْ مَاءِ السَّمَاءِ، وَبِالْمَاءِ الجَارِي وَلَمْ يَرَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ: «فِي العَسَلِ شَيْئًا»
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا العُشْرُ، وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ العُشْرِ»
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «هَذَا تَفْسِيرُ الأَوَّلِ، لِأَنَّهُ لَمْ يُوَقِّتْ فِي الأَوَّلِ يَعْنِي حَدِيثَ ابْنِ عُمَرَ، وَفِيمَا سَقَتِ السَّمَاءُ العُشْرُ، وَبَيَّنَ فِي هَذَا، وَوَقَّتَ وَالزِّيَادَةُ مَقْبُولَةٌ، وَالمُفَسَّرُ يَقْضِي عَلَى المُبْهَمِ، إِذَا رَوَاهُ أَهْلُ الثَّبَتِ»
كَمَا رَوَى الفَضْلُ بْنُ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُصَلِّ فِي الكَعْبَةِ» وَقَالَ بِلاَلٌ: «قَدْ صَلَّى»، فَأُخِذَ بِقَوْلِ بِلاَلٍ وَتُرِكَ قَوْلُ الفَضْلِ
Bukhari-Tamil-1483.
Bukhari-TamilMisc-1483.
Bukhari-Shamila-1483.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்