தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1598

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 கஅபாவின் வாசலை மூடுவதும், கஅபாவினுள் எந்த இடத்தில் நின்றும் தொழலாம் என்பதும். 

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் உஸாமா இப்னு ஜைத்(ரலி), பிலால்(ரலி), உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோரும் கஅபாவினுள் சென்று மூடிக் கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது நானே முதல் முதலில் உள்ளே நுழைந்தேன்.

பிலால்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்களா? எனக் கேட்டேன். பிலால்(ரலி), ‘ஆம்! வலப்புறத்து இரண்டு தூண்களுக்கு மத்தியில்’ எனப் பதிலளித்தார்.
Book : 25

(புகாரி: 1598)

بَابُ إِغْلاَقِ البَيْتِ، وَيُصَلِّي فِي أَيِّ نَوَاحِي البَيْتِ شَاءَ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ

دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَيْتَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلاَلٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ فَأَغْلَقُوا عَلَيْهِمْ، فَلَمَّا فَتَحُوا كُنْتُ أَوَّلَ مَنْ وَلَجَ فَلَقِيتُ بِلاَلًا

فَسَأَلْتُهُ: هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ بَيْنَ العَمُودَيْنِ اليَمَانِيَيْنِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.