தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1661

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உம்முல் ஃபழ்ல் பின்த் அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது சம்பந்தமாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். சிலர், ‘நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்’ என்றும் இன்னும் சிலர், ‘இல்லை’ என்றும் கூறிக் கொண்டிருந்தனர்.

எனவே நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பாலைக் கொடுத்தனுப்பினேன்; அவர்கள் தங்களின் ஒட்டகத்தின் மீதமர்ந்து கொண்டே அதைக் குடித்தார்கள்.
Book :25

(புகாரி: 1661)

بَابُ الوُقُوفِ عَلَى الدَّابَّةِ بِعَرَفَةَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ العَبَّاسِ، عَنْ أُمِّ الفَضْلِ بِنْتِ الحَارِثِ

أَنَّ نَاسًا اخْتَلَفُوا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَعْضُهُمْ: هُوَ صَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: لَيْسَ بِصَائِمٍ، «فَأَرْسَلْتُ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ، فَشَرِبَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.