தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1726 & 1727

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 127 இஹ்ராமிலிருந்து விடுபடும் போது முடியைக் குறைத்துக்கொள்வதும், மழித்துக்கொள்வதும். 

1726. & 1727. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரி!’ எனக் கூறியதும் தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்’ என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்..’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)’ என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பின்படி ‘அல்லாஹ் தலையை மழித்துக் கொள்பவர்களுக்குக் கருணை புரிவானாக!’ என்று ஒரு முறையோ இரண்டு முறையோ கூறினார்கள் என உள்ளது.

இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது முறையில், ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்…’ எனக் கூறினார்கள் என உள்ளது.
Book : 25

(புகாரி: 1726 & 1727)

بَابُ الحَلْقِ وَالتَّقْصِيرِ عِنْدَ الإِحْلاَلِ

1726. حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، قَالَ: نَافِعٌ كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ

1727. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

 

1726. «حَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ»

1727. «اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ» قَالُوا: وَالمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ» قَالُوا: وَالمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَالمُقَصِّرِينَ»،

وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي نَافِعٌ: «رَحِمَ اللَّهُ المُحَلِّقِينَ» مَرَّةً أَوْ مَرَّتَيْنِ، قَالَ، وَقَالَ عُبَيْدُ اللَّهِ: حَدَّثَنِي نَافِعٌ، وَقَالَ فِي الرَّابِعَةِ: «وَالمُقَصِّرِينَ»

 





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.