தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1772

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். ஹஜ்ஜை மட்டுமே எண்ணத்தில் கொண்டு (மக்காவிற்கு) வந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு ஏவினார்கள். நாங்கள் ஊர் திரும்பும் (நஃபருடைய) நாளின் இரவில் ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி)வுக்கு மாதவிடாய் வந்துவிட்டது.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘காரியத்தைக் கெடுத்து விட்டீரே!’ என்று கூறிவிட்டு ‘இவர் நம்மைத் தடுத்தேவிட்டாரே’ என்றார்கள். பிறகு அவர்கள், ‘நஹ்ருடைய (10-ஆம்) நாளில், நீ வலம்வந்தாயா?’ எனக் கேட்டதும் அவர் ‘ஆம்’ என்றார். ‘(அப்படியாயின்) நீ புறப்படு’ என்றார்கள்.
அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே என்றேன். அதற்கவர்கள், ‘தன்யீம் என்ற இடத்திற்கு போய் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்’ என்றார்கள்.

–நான் என் சகோதரருடன் புறப்பட்டு (தன்யீமுக்கு)ச் சென்றேன்.
பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களை இரவின் கடைசி நேரத்தில் – போய்க் கொண்டிருக்கும் நிலையில் சந்தித்தோம். அப்போதவர்கள் ‘இன்னின்ன இடங்களில் நீ என்னைச் சந்திக்க வேண்டும்’ என்றனர்.
Book :25

(புகாரி: 1772)

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَزَادَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا مُحَاضِرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ نَذْكُرُ إِلَّا الحَجَّ، فَلَمَّا قَدِمْنَا، أَمَرَنَا أَنْ نَحِلَّ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ النَّفْرِ، حَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَلْقَى عَقْرَى مَا أُرَاهَا إِلَّا حَابِسَتَكُمْ»، ثُمَّ قَالَ: «كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَانْفِرِي»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَكُنْ حَلَلْتُ، قَالَ: «فَاعْتَمِرِي مِنَ التَّنْعِيمِ» فَخَرَجَ مَعَهَا أَخُوهَا، فَلَقِينَاهُ مُدَّلِجًا فَقَالَ: «مَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.