தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-179

A- A+


ஹதீஸின் தரம்: மாற்றப்பட்ட சட்டம்

ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘அவர் தம் ஆண் குறியைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார்.

மேலும் இது பற்றி அலீ, ஸுபைர், தல்ஹா, உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்டதற்கு, அவர்களும் இவ்வாறே கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

அத்தியாயம்: 4

(புகாரி: 179)

حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قُلْتُ

أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ، قَالَ عُثْمَانُ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ وَيَغْسِلُ  ذَكَرَهُ  قَالَ عُثْمَانُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيًّا، وَالزُّبَيْرَ، وَطَلْحَةَ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ فَأَمَرُوهُ بِذَلِكَ


Bukhari-Tamil-179.
Bukhari-TamilMisc-179.
Bukhari-Shamila-179.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . ஸஃத் பின் ஹஃப்ஸ்-அல்லக்ம்

3 . ஷைபான் பின் அப்துர்ரஹ்மான்-அத்தமீமா

4 . யஹ்யா பின் அபூகஸீர்-அத்தாயீ

5 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா

6 . அதாஉ பின் யஸார்-அபூமுஹம்மத்-அல்ஹிலாலீ

7 . ஸைத் பின் காலித் (ரலி)-அல்ஜுஹ்னீ

8 . உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


  • இந்தச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது.

பார்க்க: முஸ்லிம்-578.

  • எனவே இல்லறத்தில் ஈடுபட்டு விந்து வெளியானாலும், விந்து வெளியாகாவிட்டாலும் இருவர் மீதும் குளிப்பது அவசியமாகும். சட்டம் மாற்றப்பட்ட விவரம் தெரியாத காரணத்தால் சில நபித்தோழர்கள் முந்தைய சட்டங்களையே சொல்லியிருக்கிறார்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.