தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2002

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி (ஸல்) அவர்களும் நோற்றனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர்.
Book :30

(புகாரி: 2002)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

«كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ المَدِينَةَ صَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تَرَكَ يَوْمَ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ تَرَكَهُ»





மேலும் பார்க்க : புகாரி-1592 .

1 comment on Bukhari-2002

  1. ரமலான் உடைய மாதத்தை மூன்று பகுதியாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி சிறப்புகளை சொல்லும் ஒரு ஹதீஸ் அனைத்து சுன்னத்துவால் ஜமாத் உலமாக்களால் அதிகமாக பயான் செய்யப்படுகிறது இந்த ஹதீஸை பற்றி ஒரு ஆய்வு:

    شهر رمضان أوَّله رحمة، وأوسَطه مغفرة، وآخِره عتق من النار

    (ரமலான் மாதத்தின் ஆரம்பம் ரஹ்மத், நடுப்பகுதி மன்னிப்பு, இறுதி நரகத்திலிருந்து விடுதலை)

    இந்த ஹதீஸ் **ضعيف** (பலவீனமானது) என பல முஹத்திதீன்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சங்கிலி (இஸ்னாத்) பலவீனமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இதில் சில பிரச்சினைகள் உள்ளன.

    ### ஹதீஸின் பலவீனத்திற்கான காரணங்கள்:

    1. **سلام بن سليمان** (சலாம் பின் சுலைமான்)
    – அவர் ஹதீஸ் அறிவிப்பில் பலவீனமானவர் என்பதாக முஹத்திதீன்கள் குறிப்பிடுகின்றனர்.

    2. **مسلمة بن الصلت** (மஸ்லமா பின் அஸ்-சல்த்)
    – அவர் அறியப்படாத அறிவிப்பாளர் மற்றும் நம்பகமானவர் அல்ல.

    இந்த ஹதீஸ் **ضعيف** என்பதால், இதை நபி (ஸல்) அவர்களின் உண்மையான வார்த்தைகள் அல்லது செயல்களாக கருத முடியாது.

    அல்பானி➖ضعيف.
    உகைலீ➖ لا يصح
    இப்னு கய்சரானி➖إسناده ضعيف
    தஹபீ➖إسناده ضعيف
    அல்-கதீப் அல்-பாக்தாதி➖إسناده ضعيف

    🟡لسان الميزان: 8/59
    🟡الكامل في الضعفاء : 4/325
    🟡ضعيف الجامع : 2135
    🟡ذخيرة الحفاظ : 2/1022
    🟡ميزان الاعتدال : 2/179
    🟡أوهام الجمع والتفريق: 2/147
    🟡الضعفاء الكبير: 2/162

    فيه] سلام بن سليمان كان ضعيفا في الحديث
    فيه سلام بن سليمان ذكر من جرحه وفيه مسلمة بن الصلت
    فيه] مسلمة بن الصلت ليس بالمعروف |
    غير محفوظ، ولا أصل له من حديث الزهري، ولا غيره

    حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ اللَّيْثِ وَعُمَرُ بْنُ سِنَانٍ، وَعَبد الصَّمَدِ بْنُ عَبد اللَّهِ الدمشقي قَالُوا، حَدَّثَنا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنا سلام بن سوار، حَدَّثَنا مَسْلَمَةُ بْنُ الصَّلْتِ، عنِ الزُّهْريّ، عَن أَبِي سَلَمَةَ، عَن أَبِي هُرَيْرَةَ، قَال: قَال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلُ شَهْرِ رَمَضَانَ رَحْمَةٌ وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.