தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2477

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 மது வைக்கப்பட்டுள்ள பானைகளை உடைப்பது, அல்லது மது வைக்கப்பட்டுள்ள தோல் குடுவைகளைக் கிழிப்பது அனுமதிக்கப்பட்டதா?

ஒருவன் ஒரு சிலையையோ, ஒரு சிலுவையையோ, கிதார் (மற்றும் யாழ், முரசு போன்ற) இசைக் கருவியையோ, எந்தப் பொருளின் மரக்கட்டையால் பலன் எதுவுமில்லையோ அத்தகைய பொருளையோ உடைத்து விட்டால்…. (நஷ்டஈடு தரவேண்டுமா?)

(நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் உடைக்கப்பட்ட ஒரு கிதார் (குறித்த வழக்கு) கொண்டு வரப்பட்டது. அதில் உடைத்தவர் நஷ்டஈடு ஏதும் வழங்க வேண்டும் என்று அவர் தீர்ப்பளிக்கவில்லை.

 ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நெருப்பு ஒன்று மூட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, ‘எதற்காக இந்த நெருப்பு மூட்டப்படுகிறது?’ என்று கேட்டார்கள். ‘நாட்டுக் கழுதை இறைச்சியைச் சமைப்பதற்காக’ என்று மக்கள் பதிலளித்தார்கள்.

அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘பானைகளை உடைத்து அவற்றிலுள்ள (இறைச்சி, உணவு ஆகிய)வற்றை எறிந்துவிடுங்கள்’ என்று உத்திரவிட்டார்கள். மக்கள், ‘அதிலுள்ளவற்றை எறிந்துவிட்டு அவற்றைக் கழுவி விடலாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறே) கழுவிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 46

(புகாரி: 2477)

بَابٌ: هَلْ تُكْسَرُ الدِّنَانُ الَّتِي فِيهَا الخَمْرُ، أَوْ تُخَرَّقُ الزِّقَاقُ، فَإِنْ كَسَرَ صَنَمًا، أَوْ صَلِيبًا، أَوْ طُنْبُورًا، أَوْ مَا لاَ يُنْتَفَعُ بِخَشَبِهِ

وَأُتِيَ شُرَيْحٌ فِي طُنْبُورٍ كُسِرَ، فَلَمْ يَقْضِ فِيهِ بِشَيْءٍ

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نِيرَانًا تُوقَدُ يَوْمَ خَيْبَرَ، قَالَ: «عَلَى مَا تُوقَدُ هَذِهِ النِّيرَانُ؟»، قَالُوا عَلَى الحُمُرِ الإِنْسِيَّةِ، قَالَ: «اكْسِرُوهَا، وَأَهْرِقُوهَا»، قَالُوا: أَلاَ نُهَرِيقُهَا، وَنَغْسِلُهَا، قَالَ: «اغْسِلُوا»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” كَانَ ابْنُ أَبِي أُوَيْسٍ يَقُولُ: الحُمُرِ الأَنْسِيَّةِ بِنَصْبِ الأَلِفِ وَالنُّونِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.