தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2719

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 கொடுக்கல் வாங்கலில் விதிக்கப்படும் நிபந்தனைகள்.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம், ‘(எங்கள்) பேரீச்ச மரங்களை எங்களுக்கும் எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே பங்கிட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’ என்று கூறவே, அன்சாரிகள், ‘நீங்கள் எங்களுக்கு பதிலாக (எங்கள் நிலத்தில்) உழையுங்கள்; நாங்கள் விளைச்சலை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறோம்’ என்று (முஹாஜிர்களிடம்) கூறினார்கள். முஹாஜிர்கள் ‘செவியேற்றோம்; கட்டுப்பட்டோம் (உங்கள் நிபந்தனையை  ஏற்றுக் கொண்டோம்) என்றார்கள்.
Book : 54

(புகாரி: 2719)

بَابُ الشُّرُوطِ فِي المُعَامَلَةِ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ، قَالَ: «لاَ»، فَقَالَ: «تَكْفُونَا المَئُونَةَ وَنُشْرِكْكُمْ فِي الثَّمَرَةِ»، قَالُوا: سَمِعْنَا وَأَطَعْنَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.