தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2773

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 செல்வந்தனுக்கும், ஏழைக்கும், விருந்தினருக்கும் வக்ஃபு செய்வது.

 உமர்(ரலி) கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள்.

நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் விரும்பினால் அதை (அதன் வருவாயை) தருமம் செய்துவிடுங்கள்’ என்று ஆலோசனை கூறினார்கள்.

எனவே, அதை ஏழை எளியவர்களுக்காகவும், வறியவர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் (அதன் வருவாயைச்) செலவிடும்படி தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள்.
Book : 55

(புகாரி: 2773)

بَابُ الوَقْفِ لِلْغَنِيِّ وَالفَقِيرِ وَالضَّيْفِ

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ

أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجَدَ مَالًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ قَالَ: «إِنْ شِئْتَ تَصَدَّقْتَ بِهَا»، فَتَصَدَّقَ بِهَا فِي الفُقَرَاءِ وَالمَسَاكِينِ وَذِي القُرْبَى وَالضَّيْفِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.