தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2804

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) கூறுங்கள்: (இறைமறுப்பாளர்களான) நீங்கள், எங்கள் விஷயத்தில் (வெற்றி, அல்லது வீர மரணம் ஆகிய) இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றீர்களா? (9:52)

(இதைத் தான்) வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் (என்று அபூசுஃப்யான் அவர்கள் ரோம சக்கரவர்த்தி ஹிராக்ளியஸிடம் கூறினார்.

 அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.

என்னிடம் (ரோம சக்கரவர்த்தி) ஹிராக்ளியஸ், ‘முஹம்மதை எதிர்த்து நீங்கள் புரிகிற போர் (முடிவு) எப்படியுள்ளது?’ என்று கேட்டேன். அதற்கு நீங்கள், ‘போர் (முடிவு எங்களிடையே) மாறி மாறி வரும்’ என்று பதிலளித்தீர்கள். இறைத்தூதர்கள் இப்படித் தான் சோதிக்கப்படுவார்கள். பிறகு, அவர்களுக்குச் சாதகமாகவே இறுதி முடிவு இருக்கும்’ என்று கூறினார்.
Book : 56

(புகாரி: 2804)

بَابُ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَا إِلَّا إِحْدَى الحُسْنَيَيْنِ} [التوبة: 52] وَالحَرْبُ سِجَالٌ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ

أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ: سَأَلْتُكَ كَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ؟، فَزَعَمْتَ «أَنَّ الحَرْبَ سِجَالٌ وَدُوَلٌ، فَكَذَلِكَ الرُّسُلُ تُبْتَلَى ثُمَّ تَكُونُ لَهُمُ العَاقِبَةُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.