தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2818

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 மின்னும் வாட்களுக்குக் கீழ் சொர்க்கம் உள்ளது.

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நம்முடைய நபி (ஸல்) அவர்கள், நம் இறைவனின் செய்தியைக் குறித்து அறிவிக்கும் போது, நம்மில் எவர் இறை வழியில் கொல்லப்படுகின்றாரோ அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் என்று குறிப்பிட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (இறைவழியில்) கொல்லப்பட்ட நம்மவர்கள் சொர்க்கத்திற்கும், (இஸ்லாத்திற்கெதிராகப் போரிட்டுக்) கொல்லப்பட்ட (இறைமறுப்பாளர்களான) அவர்கள் நரகத்திற்கும் தானே செல்வார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று கூறினார்கள்.

 உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையான சாலிம்(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு, ‘சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என (கடிதம்) எழுதினார்கள்.

மூஸா இப்னு உக்பா(ரலி) அவர்களிடமிருந்து இப்னு அபிஸ் ஸினாத்(ரஹ்) வாயிலாக உவைஸீ(ரஹ்) அவர்களும் இதே போன்று அறிவித்தார்கள்.
Book : 56

(புகாரி: 2818)

بَابٌ: الجَنَّةُ تَحْتَ بَارِقَةِ السُّيُوفِ

وَقَالَ المُغِيرَةُ بْنُ شُعْبَةَ، أَخْبَرَنَا نَبِيُّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رِسَالَةِ رَبِّنَا: «مَنْ قُتِلَ مِنَّا صَارَ إِلَى الجَنَّةِ» وَقَالَ عُمَرُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَيْسَ قَتْلاَنَا فِي الجَنَّةِ، وَقَتْلاَهُمْ فِي النَّارِ؟ قَالَ: «بَلَى»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ – وَكَانَ كَاتِبَهُ – قَالَ

كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَاعْلَمُوا أَنَّ الجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ»

تَابَعَهُ الأُوَيْسِيُّ، عَنْ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.