தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2897

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வர். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு இன்னொரு காலம் வரும். (அப்போதும் அறப்போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே (அவர்களுக்கு) வெற்றியளிக்கப்படும்.

பிறகு மற்றொரு காலம் வரும். (அப்போதும் ஒரு குழுவினர் அறப்போருக் காகச் செல்வார்கள்.) அப்போது, ‘‘நபித் தோழர்களின் தோழருடன் தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 56

(புகாரி: 2897)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

يَأْتِي زَمَانٌ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ: فِيكُمْ مَنْ صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُقَالُ: نَعَمْ، فَيُفْتَحُ عَلَيْهِ، ثُمَّ يَأْتِي زَمَانٌ، فَيُقَالُ: فِيكُمْ مَنْ صَحِبَ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُقَالُ: نَعَمْ، فَيُفْتَحُ، ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَالُ: فِيكُمْ مَنْ صَحِبَ صَاحِبَ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُقَالُ: نَعَمْ، فَيُفْتَحُ


Bukhari-Tamil-2897.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2897.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.