தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2984

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 125 ஒரு பெண், (வாகனத்தில்) தன் சகோதரனுக்குப் பின்னால் அமர்ந்து செல்வது.

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்றபோது நான், ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் தோழர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் நற்பலனைப் பெற்றுத் திரும்புகிறார்கள். ஆனால், நானோ ஹஜ்ஜை விட அதிகமாக (உம்ரா எதையும்) செய்யவில்லையே!’ என்று (ஏக்கத்துடன்) கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீ (உம்ரா செய்யப்) போ! என்னிடம், ‘உன்னை (உன் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (வாகனத்தில் தனக்குப்) பின்னால் உட்கார வைத்துக் கொள்ளட்டும்’ என்று கூறிவிட்டு, அப்துர் ரஹ்மான் அவர்களை ‘தன்யீம்’ என்னுமிடத்திலிருந்து என்னை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார்கள்.

நான் (உம்ராவை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி) வரும்வரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை எதிர்பார்த்து மக்காவின் மேற்பகுதியில் காத்திருந்தார்கள்.
Book : 56

(புகாரி: 2984)

بَابُ إِرْدَافِ المَرْأَةِ خَلْفَ أَخِيهَا

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الأَسْوَدِ، حَدَّثَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ

يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ أَصْحَابُكَ بِأَجْرِ حَجٍّ وَعُمْرَةٍ، وَلَمْ أَزِدْ عَلَى الحَجِّ؟ فَقَالَ لَهَا: «اذْهَبِي، وَلْيُرْدِفْكِ عَبْدُ الرَّحْمَنِ»، فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ أَنْ يُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ، فَانْتَظَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى مَكَّةَ حَتَّى جَاءَتْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.