தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3290

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போர் நடந்தபோது இணைவைப்பவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். உடனே, இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்’ என்று கத்தினான். முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள். அப்போது அங்கு தமக்கருகேயிருந்த தம் தந்தை யமான்(ரலி) (முன்னணிப் படையினரிடம்) சிக்கியதை ஹுதைஃபா(ரலி) பார்த்துவிட்டு,

‘அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை! இது என் தந்தை!’ என்று (உரக்கக்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அவரைவிட்டு வைக்கவில்லை. இறுதியில் அவரை (தாக்கிக்) கொன்றுவிட்டார்கள். ஹுதைஃபா(ரலி),

‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று கூறினார்கள்.
‘ஹுதைஃபா(ரலி) மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் இறக்கும் வரை நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது’ என்று உர்வா(ரஹ்) கூறினார்கள்.
Book :59

(புகாரி: 3290)

حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: هِشَامٌ أَخْبَرَنَا، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ المُشْرِكُونَ، فَصَاحَ إِبْلِيسُ: أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ اليَمَانِ، فَقَالَ: أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي، فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ، فَقَالَ: حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ، قَالَ عُرْوَةُ فَمَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهُ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.