தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3385

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘அபூ பக்ரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), ‘அபூ பக்ர்(ரலி) இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்பு போன்றே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே கூறினார்கள்.

பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘அபூ பக்ருக்குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தெரிவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)வர்கள்’ என்று கூறினார்கள்.எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூ பக்ர்(ரலி) (மக்களுக்குத்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் ஹுஸைன்(ரஹ்) கூறினார்கள்:

ஸாயிதா(ரஹ்) அவர்களிடமிருந்து, (‘அபூ பக்ர்(ரலி) இத்தகைய மனிராயிற்றே’ என்னும் ஆயிஷா(ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) ‘இளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவித்தார்கள்.
Book :60

(புகாரி: 3385)

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ يَحْيَى البَصْرِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ

مَرِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ»، فَقَالَتْ عَائِشَةُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ كَذَا، فَقَالَ مِثْلَهُ، فَقَالَتْ مِثْلَهُ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ» فَأَمَّ أَبُو بَكْرٍ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

وَقَالَ حُسَيْنٌ: عَنْ زَائِدَةَ: رَجُلٌ رَقِيقٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.