பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(முதன் முதலாக தமக்கு வேத வெளிப்பாடு அருளப்பட்ட பின்பு) நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரன) கதீஜா(ரலி) அவர்களிடம், தம் மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே, கதீஜா(ரலி) நபி(ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும், வேதம் கற்றவருமான) வரகா இப்னு நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறிஸ்துவராக மாறி விட்டிருந்த ஒரு மனிதராயிருந்தார். அவர், (நபி ஈசாவுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதி வந்தார்.
வரகா, நபி(ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘இவர்தாம் (இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத வெளிப்பாட்டைக் கொண்டு வரும்) ‘நாமூஸ்’ எனும் வானவர். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப் போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்தால், உங்களுக்கு வலிமையுடன் உதவுவேன்’ என்று கூறினார்.
‘நாமூஸ்’ என்பவர் பிறருக்கு அறிவிக்காமல் மறைக்கிற விஷயங்களை (இறை கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவித்துத் தரும் வானவராவார்.
Book : 60
بَابُ (وَاذْكُرْ فِي الكِتَابِ مُوسَى إِنَّهُ كَانَ مُخْلِصًا وَكَانَ رَسُولًا نَبِيًّا وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا)، كَلَّمَهُ، {وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا} [مريم: 53] ” يُقَالُ لِلْوَاحِدِ وَلِلاِثْنَيْنِ وَالجَمِيعِ نَجِيٌّ، وَيُقَالُ: {خَلَصُوا نَجِيًّا} [يوسف: 80] اعْتَزَلُوا: نَجِيًّا، وَالجَمِيعُ أَنْجِيَةٌ يَتَنَاجَوْنَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، سَمِعْتُ عُرْوَةَ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا
فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَدِيجَةَ يَرْجُفُ فُؤَادُهُ، فَانْطَلَقَتْ بِهِ إِلَى وَرَقَةَ بْنِ نَوْفَلٍ، وَكَانَ رَجُلًا تَنَصَّرَ، يَقْرَأُ الإِنْجِيلَ بِالعَرَبِيَّةِ، فَقَالَ وَرَقَةُ: مَاذَا تَرَى؟ فَأَخْبَرَهُ، فَقَالَ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى، وَإِنْ أَدْرَكَنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا “
النَّامُوسُ: صَاحِبُ السِّرِّ الَّذِي يُطْلِعُهُ بِمَا يَسْتُرُهُ عَنْ غَيْرِهِ
வரக்கா சொர்க்கவாதியா நரகவாதியா❓ ஏனென்றால் பெருமானருக்கு அவர் வாக்கு கொடுக்கிறார் நீங்கள் உறுதியான நபியாக ஆன பிறகு உங்களுக்கு நான் துணையாக இருப்பேன் என்று சொல்கிறார் ஜிப்ரீல் வந்ததையும் அவர் ஏற்றுக் கொள்கிறார் ❓
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒருவரை சொர்க்கவாசியா? நரகவாசியா? என்று முடிவு செய்வதற்கு அல்லாஹ் அவ்வாறு கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியிருக்க வேண்டும். இவர் சொர்க்கவாசி என்று நபி (ஸல்) கூறியதாக சரியான தகவல் இல்லை.
வரகா அவர்களை சிலர் நபித்தோழர் பட்டியலில் சேர்க்கின்றனர். சிலர் அவ்வாறு சேர்ப்பதில்லை. ஏனெனில் நபிக்கு உதவி செய்கிறேன் என்று கூறினார். ஈமான் கொள்கிறேன் என்று கூறவில்லை.
ஈஸா (அலை) அவர்களை நம்பிக்கைக் கொண்டோர்களில் நல்ல மனிதர் என்பதற்கே ஆதாரம் உள்ளது.
இவரின் நிலைப் பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று முடிவு செய்வதே சரியான நிலைப்பாடாகும். (இதுதான் சில அறிஞர்களின் கருத்து)