நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மிஃராஜ் இரவில்) நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைப் பார்த்தேன்.
ஈஸா (அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும், சுருள்முடி உடையவர்களாகவும், அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள்.
மூஸா (அலை) அவர்களோ மாநிறமுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, தொங்கலான முடியுடையவர்களாகவும், சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
அத்தியாயம்: 60
குறிப்பு:
صحيح البخاري (3/ 292 بترقيم الشاملة آليا):
قالَ الحافظ أبو ذر: هكذا في سائر الروايات المسموعة عن الفربري: «مجاهد عن ابن عمر» فلا أدري هكذا حدَّث به البخاري، أو غلط فيه الفربري؛ لأنَّني رأيته في سائر الروايات عن ابن كثير وغيره: «مجاهد عن ابن عباس» وهو الصواب، والله أعلم.
புகாரீ நூலின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூதர்-அப்து பின் அஹ்மத் அல்ஹரவீ அவர்கள், இந்தச் செய்தியை புகாரீ அவர்களின் மாணவரான ஃபர்பரீ-முஹம்மத் பின் யூஸுஃப் அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்தவர்கள் இதை இப்னு உமர் (ரலி) அவர்களின் செய்தியாக அறிவித்துள்ளனர்.
புகாரீ அவர்கள் இவ்வாறு தான் அறிவித்தார்களா? அல்லது புகாரீ அவர்களின் மாணவரான ஃபர்பரீ அவர்கள் இவ்வாறு தவறாக அறிவித்தாரா? என்று எனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டு விட்டு, இந்தச் செய்தியை முஹம்மத் பின் கஸீர் அவர்கள் வழியாகவும், மற்றவர்களின் வழியாகவும் அறிவிப்பவர்கள் இதை இப்னு உமர் (ரலி) அவர்களின் செய்தியாக அறிவிக்கவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் செய்தியாகத்தான் அறிவித்துள்ளார்கள். இதுதான் தான் சரியானது (அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்) என்று கூறியுள்ளார்.
(புகாரி: 3438)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ المُغِيرَةِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«رَأَيْتُ عِيسَى ومُوسَى وَإِبْرَاهِيمَ، فَأَمَّا عِيسَى فَأَحْمَرُ جَعْدٌ عَرِيضُ الصَّدْرِ، وَأَمَّا مُوسَى، فَآدَمُ جَسِيمٌ سَبْطٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ الزُّطِّ»
Bukhari-Tamil-3438.
Bukhari-TamilMisc-3438.
Bukhari-Shamila-3438.
Bukhari-Alamiah-3183.
Bukhari-JawamiulKalim-3207.
3438. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “” رَأَيْتُ عِيسَى وَمُوسَى وَإِبْرَاهِيمَ، فَأَمَّا عِيسَى فَأَحْمَرُ جَعْدٌ عَرِيضُ الصَّدْرِ، وَأَمَّا مُوسَى فَآدَمُ جَسِيمٌ سَبْطٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ الزُّطِّ “”.
பாடம் : 48 (அல்லாஹ் கூறுகின்றான்:) மேலும், (நபியே!) மர்யமைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் எடுத்துரைப்பீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரைவிட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யமின் முன் னிலையில் முழு மனித உருவில் தோன்றி னார். உடனே மர்யம் கூறினார்: ‘‘உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்” அதற்கு அவர் கூறினார்: ‘‘நான் உம் இறைவனின் தூதராவேன்: தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” மர்யம் கூறினார்: ‘‘எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” அதற்கு வானவர் கூறினார்: ‘‘அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற் காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் அது நடந்தே தீரும்” (19:16லி21) யிவிலகியிருந்தோர்’ (இஅதஸலத்) லிஒதுங்கி தனிமையில் இருந்தார்; கிழக்குப் பக்கம் (ஷர்கீ)லி கிழக்கை ஒட்டிய ஓரிடத்தில். (19:16) ‘அவரைக் கொண்டுசென்றது’ (அஜாஅஹா) லி அவரை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்றது (19:23). இது யிஜாஅ’ என்பதன் ‘அஃப்அல’ வாய்பாட்டில் வந்தது. துசாகித் (அல்லது தஸ்ஸாகத்) விழும்; சொரியும். யிகஸிய்யு லி தொலைவான (காஸியன்) இடத்தில் (19:22). யிஃபரிய்யு’ (பயங்கரமான) லி மிகப்பெரிய காரியம். 19:27) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யிநஸ்யன்’ (மறக்கப்பட்ட) லி எப்பொரு ளாகவும் இல்லாமல் (19:23). மற்றவர்கள், ‘அற்பமான பொருளாக’ என்று இதற்கு அர்த்தம் கூறுகிறார்கள். அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘நீர் இறையச்சமுடையவராக இருந்தால்’ (19:18) என்று மர்யம் (அலை) அவர்கள் சொல்லக் காரணம், இறையச்சம் உள்ளவர் சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார் என அவர் அறிந்திருந்ததுதான். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யிசரிய்யு’ (ஊற்று) என்பது யிசிரியாக்’ மொழியில் சிற்றாற்றைக் குறிக்கும்.
3438. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
(மிஅராஜ் இரவில்) நான் ஈசா (அலை), மூசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா (அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர் களாகவும் சுருள்முடி உடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந் தார்கள். மூசா (அலை) அவர்களோ மாநிற முடையவர்களாகவும் உயரமானவர்களாகவும், படிந்த, தொங்கலான முடியுடையவர் களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர் களாகவு)ம் இருந்தார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. நீங்கள் குறிப்பிட்டது போன்று இந்த செய்திக்கு பாடத்தலைப்பு இல்லை. மற்றபடி ஹதீஸின் கருத்து சரிபார்த்து பதிவிடப்பட்டுள்ளது.