தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3525

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

அறியாமைக் காலத்திலும், இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் தன் முன்னோர்களுடன் தன்னை இணைத்துப் பேசுவது செல்லும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர் தாம் கண்ணியத்திற்குரியவர். அவர் (எவரெனில்), அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹீம் அவர் களின் புதல்வரான இஸ்ஹாக் அவர்களின் புதல்வரான யஃகூப் அவர்களின் புதல்வரான யூசுஃப் அவர்கள் தாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும், இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

‘(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!’ என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிகளின் கிளைக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.
Book : 61

(புகாரி: 3525)

بَابُ مَنِ انْتَسَبَ إِلَى آبَائِهِ فِي الْإِسْلَامِ وَالْجَاهِلِيَّةِ

وَقَالَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْكَرِيمَ ابْنَ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ خَلِيلِ اللهِ

وَقَالَ الْبَرَاءُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبِ

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ

لَمَّا نَزَلَتْ { وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ } جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَادِي يَا بَنِي فِهْرٍ يَا بَنِي عَدِيٍّ بِبُطُونِ قُرَيْشٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.