தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3916

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) கூறினார்.
இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் தந்தையை விட முன்னதாக ஹிஜ்ரத் செய்து வந்தீர்கள்’ என்று சொல்லப்படும்போது அவர்கள் கோபமுற்றுக் கூறுவார்கள்: ‘நானும் (என் தந்தை) உமர்(ரலி) அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (‘பைஅத்’ எனும் உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்காகச்) சென்றோம். நபி அவர்கள் மதிய ஓய்வெடுத்து (உறங்கி)க் கொண்டிருக்கக் கண்டோம். எனவே நாங்கள் வீட்டிற்குத் திரும்பி விட்டோம். பிறகு உமர்(ரலி) என்னை அனுப்பி, ‘நீ போய், அவர்கள் (உறக்கத்திலிருந்து) விழித்தெழுந்துவிட்டார்களா என்று பார்’ என்று கூறினார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் விழித்திருந்தார்கள். எனவே,) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தேன். பிறகு உமர்(ரலி) அவர்களிடம் சென்று நபி(ஸல்) அவர்கள் விழித்தெழுந்துவிட்டார்கள் என்று தெரிவித்தேன். பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு விரைந்தோடிச் சென்றடைந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு நானும் (இரண்டாம் முறையாக) உறுதிமொழி கொடுத்தேன்.
Book :63

(புகாரி: 3916)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، أَوْ بَلَغَنِي عَنْهُ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ

سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، إِذَا قِيلَ لَهُ هَاجَرَ قَبْلَ أَبِيهِ يَغْضَبُ، قَالَ: ” وَقَدِمْتُ أَنَا وَعُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْنَاهُ قَائِلًا، فَرَجَعْنَا إِلَى المَنْزِلِ فَأَرْسَلَنِي عُمَرُ، وَقَالَ: اذْهَبْ فَانْظُرْ هَلِ اسْتَيْقَظَ فَأَتَيْتُهُ، فَدَخَلْتُ عَلَيْهِ فَبَايَعْتُهُ، ثُمَّ انْطَلَقْتُ إِلَى عُمَرَ فَأَخْبَرْتُهُ أَنَّهُ قَدِ اسْتَيْقَظَ، فَانْطَلَقْنَا إِلَيْهِ نُهَرْوِلُ هَرْوَلَةً حَتَّى دَخَلَ عَلَيْهِ، فَبَايَعَهُ ثُمَّ بَايَعْتُهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.