தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4060 & 4061

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4060 & 4061. அபூ உஸ்மான் (ரஹ்) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டு வந்த அந்த நாட்களில் ஒன்றில், தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அவர்களையும், ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களையும் தவிர்த்து (முஹாஜிர்களில் வேறு யாரும்) அவர்களுடன் எஞ்சியிருக்கவில்லை.

இது குறித்து தல்ஹா (ரலி) அவர்களும் ஸஅத் (ரலி) அவர்களும் நேரடியாக அறிவித்த ஹதீஸையும் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
Book :64

(புகாரி: 4060 & 4061)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُعْتَمِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ زَعَمَ أَبُو عُثْمَانَ

«أَنَّهُ لَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي بَعْضِ تِلْكَ الأَيَّامِ الَّتِي يُقَاتِلُ فِيهِنَّ، غَيْرُ طَلْحَةَ، وَسَعْدٍ» عَنْ حَدِيثِهِمَا





பார்க்க ஹதீஸ் எண்-3722 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.