பாடம்: 3
“நபியே! நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்” எனும் (அல்குர்ஆன் 75:18) ஆவது இறைவசனம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நாம் இதனை விவரிக்கும் போது அதன்படி செயல்படுங்கள்” என்று இவ்வசனத்திற்குப் பொருள் எனக் கூறியுள்ளார்கள்.
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்” எனும் (அல்குர்ஆன் 75:16) ஆவது வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டுவரும்போது நபி (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது.
எனவே, அல்லாஹ், “லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (அல்குர்ஆன் 75:1-40) ஆவது அத்தியாயத்தின், “இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனதில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்’ எனும் (அல்குர்ஆன் 75:16-17) வசனங்களை அருளினான்.
அதாவது, “உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்” என்று இறைவன் கூறினான்.
மேலும், “நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்” என்ற (அல்குர்ஆன் 75:18) ஆவது வசனத்தையும் அருளினான். அதாவது,”நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்” என்று கூறினான்.
“பின்னர், அதனை விளக்குவதும் எம்முடைய பொறுப்பாகும்” எனும் (அல்குர்ஆன் 75:19) ஆவது வசனத்தையும் அருளினான். அதாவது, “உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்” என்று கூறினான்.
(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு வரும்போது) தலையைத் தாழ்த்தி (அருளப்படும் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் மெளனத்துடன் கேட்டு)க் கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும்போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.
“(மனிதனே! இது) உனக்குக் கேடுதான்! கேடேதான்” எனும் (அல்குர்ஆன் 75:34) ஆவது வசனம் ஓர் எச்சரிக்கையாகும்.
அத்தியாயம்: 65
(புகாரி: 4929)بَابُ قَوْلِهِ: {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 18] قَالَ ابْنُ عَبَّاسٍ: {قَرَأْنَاهُ} [القيامة: 18]: «بَيَّنَّاهُ»، {فَاتَّبِعْ} [القيامة: 18]: «اعْمَلْ بِهِ»
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ
فِي قَوْلِهِ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16]، قَالَ: ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ جِبْرِيلُ بِالوَحْيِ، وَكَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ، وَكَانَ يُعْرَفُ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي فِي: لا أُقْسِمُ بِيَوْمِ القِيَامَةِ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ، إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 17] قَالَ: عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ، {وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 17]: فَإِذَا أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ، {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: 19]: عَلَيْنَا أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ، قَالَ: فَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ، فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ.
{أَوْلَى لَكَ فَأَوْلَى} [القيامة: 34] تَوَعُّدٌ
Bukhari-Tamil-4929.
Bukhari-TamilMisc-4929.
Bukhari-Shamila-4929.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-4573.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ
3 . ஜரீர் பின் அப்துல்ஹமீத்-அல்ளப்பீ
4 . மூஸா பின் அபூஆயிஷா-அல்ஹம்தானீ
5 . ஸயீத் பின் ஜுபைர்-அல்அஸதீ
6 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
சமீப விமர்சனங்கள்