தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5022

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 இறைவேதத்தின்படி (செயல்படுமாறு) உபதேசித்தல்.

 தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் மரண சாசனம் (வஸிய்யத்) செய்துள்ளார்களா?’ என்று கேட்டேன். அன்னார் ‘இல்லை’ என்றார்கள். நான் ‘அப்படியானால் மரண சாசனம் செய்வது மக்களின் மீது எப்படிக் கடமையாக்கப்பட்டது? நபியவர்கள் மரண சாசனம் செய்திராமலேயே மக்களுக்கு அந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதா?’ என்று வினவினேன். அன்னார் ‘இறைவேதத்தின்படி செயல்படுமாறு நபியவர்கள் உபதேசித்தார்கள்’ என்று பதிலளித்தார்கள். 45

Book : 66

(புகாரி: 5022)

بَابُ الوَصِيَّةِ بِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، حَدَّثَنَا طَلْحَةُ، قَالَ

سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى: آوْصَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: لاَ، فَقُلْتُ: كَيْفَ كُتِبَ عَلَى النَّاسِ الوَصِيَّةُ أُمِرُوا بِهَا وَلَمْ يُوصِ؟ قَالَ: «أَوْصَى بِكِتَابِ اللَّهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.