தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5273

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 12

‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிடமிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (அல்குர்ஆன்: 2:229)

ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர…” எனும் (அல்குர்ஆன்: 2:229) ஆவது வசனத் தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர.

(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந்துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.


 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (தந்துவிடுகிறேன்)” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), ‘‘தோட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லிவிடுங்கள்!” என்று கூறினார்கள்.


அபூஅப்துல்லாஹ் (புகாரி இமாம்) கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பாளர்தொடரில் ‘முதாபஆ’ (அறிவிப்பாளர்தொடரில் ஒற்றுமை) இல்லை.

(அதாவது புகாரி அவர்கள் இதன் மூலம் கூறும் தகவல்: இந்தச் செய்தியை காலித் அல்ஹத்தாஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர். அஸ்ஹர் பின் ஜமீல் மட்டுமே இதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கூறியுள்ளார் என்பதாகும். எனவே முதாபஅத் இல்லை என்கிறார். மேலும் இந்தச் செய்தி அய்யூப் அவர்கள் வழியாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறப்பட்டு மவ்ஸூலாக-அறிவிப்பாளர்தொடரில் முறிவு ஏற்படாமல் வந்துள்ளது. முர்ஸலாகவும் வந்துள்ளது)

விரிவாக பார்க்க: புகாரி-5276)


அத்தியாயம்: 68

(புகாரி: 5273)

بَابُ الخُلْعِ وَكَيْفَ الطَّلاَقُ فِيهِ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ} [البقرة: 229]- إِلَى قَوْلِهِ – {الظَّالِمُونَ} [البقرة: 229] وَأَجَازَ عُمَرُ، الخُلْعَ دُونَ السُّلْطَانِ وَأَجَازَ عُثْمَانُ، الخُلْعَ دُونَ عِقَاصِ رَأْسِهَا وَقَالَ طَاوُسٌ: {إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ} [البقرة: 229] فِيمَا افْتَرَضَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى صَاحِبِهِ فِي العِشْرَةِ وَالصُّحْبَةِ، وَلَمْ يَقُلْ قَوْلَ السُّفَهَاءِ: لاَ يَحِلُّ حَتَّى تَقُولَ لاَ أَغْتَسِلُ لَكَ مِنْ جَنَابَةٍ

حَدَّثَنَا  أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ

أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»


Bukhari-Tamil-5273.
Bukhari-TamilMisc-5273.
Bukhari-Shamila-5273.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அஸ்ஹர் பின் ஜமீல்

3 . அப்துல்வஹ்ஹாப்-அஸ்ஸகஃபீ

4 . காலித் பின் மிஹ்ரான்-காலித் அல்ஹத்தாஃ

5 . இக்ரிமா

6 . இப்னு அப்பாஸ் (ரலி)


தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்கள் தனது அல்இல்ஸாமாத் எனும் நூலில் இன்னின்ன ஹதீஸ்கள் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்களின் நிபந்தனைப்படி உள்ள சரியான ஹதீஸ்கள் தான். ஆனால் அதை அவர்கள் பதிவு செய்யவில்லை என்று கூறுவார்.

தனது ததப்புஃ எனும் நூலில் அவர்கள் இருவரும் பதிவு செய்துள்ள ஹதீஸ்களில் விமர்சனம் இருந்தால் குறிப்பிடுவார். (இந்த இரண்டு நூலும் சேர்ந்தே இப்போது அல்இல்ஸாமாத் வத்ததப்புஃ என்று கூறப்படுகிறது)

மேற்கண்ட செய்தி விமர்சனம் உள்ள செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

الإلزامات والتتبع للدارقطني (ص327):
171- وأخرج البخاري عن أزهر بن جميل عن الثقفي عن خالد عن عكرمة عن ابن عباس: أن امرأة ثابت بن قيس. قصة الخلع.
وعن المخرمي عن قراد عن جرير عن أيوب عن عكرمة عن ابن عباس وحماد ابن سلمة عن أيوب، وأصحاب الثقفي غير أزهر يرسلونه أيضاً. وخالد الطحان وإبراهيم بن طهمان يرسلونه عن خالد الحذاء عن عكرمة، ولم يخرج مسلم لعكرمة شيئاً.

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இந்தச் செய்தி பற்றி குறிப்பிடும்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் ‘முதாபஅத்’ (அறிவிப்பாளர்தொடரில் ஒற்றுமை) இல்லை என்ற தகவலை கூறியுள்ளார். (அதாவது இதில் இடம்பெறும் சில ஆசிரியர்களிடமிருந்து அறிவிக்கும் மாணவர்கள் ஒரே மாதிரியான அறிவிப்பாளர்தொடரை அறிவிக்கவில்லை என்பதாகும்)

இதைப் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ள தகவல்:

1. இந்தச் செய்தியை அப்துல்வஹ்ஹாப்-அஸ்ஸகஃபீ அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் அஸ்ஹர் பின் ஜமீல் மட்டுமே இதை முத்தஸிலாக-அதாவது அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்படாமல் அறிவித்துள்ளார். மற்றவர்கள் அப்துல்வஹ்ஹாப் —> காலித் —> இக்ரிமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் இக்ரிமா அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

(ஆனால் இந்த வகை முர்ஸலான அறிவிப்பாளர்தொடர் நமக்கு கிடைக்கவில்லை. தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இதை, புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் ‘முதாபஅத்’ (அறிவிப்பாளர்தொடரில் ஒற்றுமை) இல்லை” என்று கூறியதின் அடிப்படையில் கூறியிருக்கலாம் என்ற தகவலை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார்)

2 . காலித் அல்ஹத்தாஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்ராஹீம் பின் தஹ்மான், காலித் அத்தஹ்ஹான் ஆகியோரும் காலித் —> இக்ரிமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

3 . அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அல்லது ஹம்மாத் பின் ஸைத் அவர்களும் அய்யூப் —> இக்ரிமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இக்ரிமா வழியாக வரும் ஹதீஸ்களை தனி ஆதாரமாக பதிவு செய்யவில்லை. (வேறு அறிவிப்பாளருடன் இணைத்து 2 இடங்களில் கூறியுள்ளார். பார்க்க: முஸ்லிம்-2293, 2294)

(நூல்: அல்இல்ஸாமாது வத்ததப்புஃ-1/327)

இந்தக் கருத்துவேறுபாட்டுக்கு இக்ரிமா அவர்களும் காரணமாக இருக்கலாம். அவர் சில சமயம் இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டதாக அறிவித்திருக்கலாம். சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முர்ஸலாக அறிவித்திருக்கலாம். எனவே இக்ரிமா அவர்கள் விசயத்தையும் இதில் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


هدي الساري (ص375 ط السلفية):
قال الدارقطني: وأخرج البخاري عن أزهر بن جميل، عن الثقفي، عن أيوب، عن عكرمة، عن ابن عباس: أن امرأة ثابت بن قيس بن شماس اختلعت منه، ومن حديث جرير بن حازم، عن أيوب، كذلك قال، وأصحاب الثقفي غير أزهر يرسلونه، وكذا حماد بن سلمة، عن أيوب، وكذا أرسله أصحاب خالد الحذاء، عن عكرمة.
قلت: قد حكى البخاري الاختلاف فيه ‌وعلقه ‌لإبراهيم ‌بن ‌طهمان، ‌عن ‌خالد ‌الحذاء ‌مرسلا، ‌وعن ‌أيوب ‌موصولا، ‌وذلك ‌لما ‌يقوي ‌رواية ‌جرير ‌بن ‌حازم، وفي رواية أبي ذر، عن المستملي من الزيادة.
قال البخاري عقب حديث أزهر: لا يتابع فيه عن ابن عباس، وهذا معنى قول الدارقطني: إن أصحاب الثقفي يرسلونه. وقد ذكرت من وصل حديث إبراهيم بن طهمان في تغليق التعليق.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் கருத்தைக் குறிப்பிட்ட பின்பு; இப்ராஹீம் பின் தஹ்மான் அவர்கள் காலித் அல்ஹத்தாஃ அவர்களிடமிருந்து முர்ஸலாகவும், அய்யூப் அவர்களிடமிருந்து மவ்ஸூலாகவும் அறிவித்த செய்திகளை (முஅல்லகாக) புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிட்டுள்ளார்.

அய்யூப் அவர்களிடமிருந்து மவ்ஸூலாக அறிவித்துள்ள ஜரீர் பின் ஹாஸிம் அவர்களின் செய்தியை பலப்படுத்துவதற்கு தான் இவ்வாறு புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.

(எனவே சிலர் முர்ஸலாக அறிவித்திருப்பதால் மவ்ஸூலாக அறிவித்துள்ள மற்றவர்களின் செய்திகளை புறக்கணிக்கத் தேவையில்லை என்பது இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் கருத்தாகும்.)

(நூல்: ஹத்யுஸ் ஸாரீ-1/375)


تغليق التعليق (4/ 462):
5275 – وَعَنِ ابْنِ أَبِي تَمِيمَةَ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ جَاءَتِ امْرَأَةُ ثَابِتِ بْنِ قَيْسٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَا أَعِيبُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلا خُلُقٍ وَلَكِنِّي لَا أُطِيقُهُ فَقَالَ رَسُول الله صلى الله عليه وسلم فَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ قَالَتْ نَعَمْ ابْنُ أَبِي تَمِيمَةَ هُوَ أَيُّوبُ
أَنْبَأَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ سُلَيْمَانَ بْنِ حَمْزَةَ أَنَّ عَبْدَ الْعَزِيزِ بْنَ بَاقَا كَتَبَ إِلَيْهِمْ أَنا يَحْيَى بْنُ ثَابِتِ بْنِ بُنْدَارٍ أَنا أبي أَنا أَبُو بكر البرقاني أَنا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الشَّرْقِيِّ وَأَبُو حَاتِمٍ مَكِّيٌّ قَالا ثَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ حَدَّثَني أبي حَدَّثَني ‌إِبْرَاهِيم ‌بن ‌طهْمَان عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ جَاءَتِ امْرَأَةُ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ الأَنْصَارِيِّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَا أَعِيبُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلا خُلُقٍ وَلَكِنْ لَا أُطِيقُهُ فَذَكَرَ مِثْلَهُ وَلَمْ يَذْكُرِ الإِسْنَادَ الأَوَّلَ الْمُرْسَلَ
وَهَكَذَا رَوَاهُ أَبُو نُعَيْمٍ فِي الْمُسْتَخْرَجِ قَالَ ثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ ثَنَا أَحْمَدُ بن حَفْص بِهِ قَوْله

முழு அறிவிப்பாளர்தொடரைக் கூறாமல் முஅல்லகாக அறிவித்துள்ள இப்ராஹிம் பின் தஹ்மான் அவர்களின் அறிவிப்பை முழு அறிவிப்பாளர்தொடருடன் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தனது தஃக்லீகுத் தஃலீக் எனும் நூலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஃக்லீகுத் தஃலீக்-4/462)


எனவே இதன் சுருக்கம்: காலித் அல்ஹத்தாஃ அவர்களிடமிருந்து சிலர் முர்ஸலாகவும், சிலர் மவ்ஸூலாகவும் அறிவித்துள்ளனர். அய்யூப் அவர்களிடமிருந்து சிலர் முர்ஸலாகவும், சிலர் மவ்ஸூலாகவும் அறிவித்துள்ளனர்.

இப்ராஹீம் பின் தஹ்மான், ஜரீர் பின் ஹாஸிம் ஆகியோர் மவ்ஸூலாக அறிவிக்கும் செய்திகளும் பலமானவை. இவை அஸ்ஹர் பின் ஜமீல் இடம்பெறும் செய்தியையும் பலப்படுத்துகின்றன என்பதே ஹதீஸ்துறை அறிஞர்களின் முடிவாகும்.


மேலும் பார்க்க: புகாரி-5276.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.