தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5557

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பராஉ(ரலி) கூறினார்

அபூ புர்தா(ரலி) (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவரிடம் ‘அதற்கு பதிலாக வேறொன்றை அறுப்பீராக!’ என்று கூறினார்கள். அதற்கு அபூ புர்தா(ரலி), ‘என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை; (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)’ என்று வினவினார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்: ‘அது இரண்டு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்தது’ என்று அபூ புர்தா(ரலி) சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள், ‘இதையே அதற்கு பதிலாக அறுத்துக்கொள்ளங்கள். உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது’ என்று கூறினார்கள்.

இது பற்றிய அனஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பில், ‘என்னிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாட்டைத் தவிர வேறொன்றுமில்லை’ என்று அபூ புர்தா(ரலி) கூறினார் என உள்ளது.

Book :73

(புகாரி: 5557)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ البَرَاءِ، قَالَ

ذَبَحَ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْدِلْهَا» قَالَ: لَيْسَ عِنْدِي إِلَّا جَذَعَةٌ – قَالَ شُعْبَةُ: وَأَحْسِبُهُ قَالَ: هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ – قَالَ: «اجْعَلْهَا مَكَانَهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ» وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «عَنَاقٌ جَذَعَةٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.