தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5622

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 சிறியோர், பெரியோருக்குப் பணிவிடை செய்வது.

 அனஸ்(ரலி) கூறினார்

நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங்க காய்களால் ஆன மதுவை ஊற்றிக் கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாக இருந்தேன். அப்போது ‘மது தடைசெய்யப்பட்டுவிட்டது’ என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினர்கள்)’ அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு’ என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் கவிழ்த்து(க கொட்டி) விட்டோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அல்பஸரீ(ரஹ்) கூறினார்:

நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘அவர்களின் மது எத்தகையது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேரீச்சச் செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் இப்னு அனஸ்(ரஹ்), ‘(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது’ என்று கூறினார்கள். அனஸ்(ரலி) அதை மறுக்கவில்லை.

என் தோழர்களில் ஒருவர் கூறினார்: அனஸ்(ரலி), ‘அதுதான் அவர்களின் அன்றைய மதுபானமாக இருந்தது’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.43

Book : 74

(புகாரி: 5622)

بَابُ خِدْمَةِ الصِّغَارِ الكِبَارَ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

كُنْتُ قَائِمًا عَلَى الحَيِّ أَسْقِيهِمْ، عُمُومَتِي وَأَنَا أَصْغَرُهُمْ، الفَضِيخَ، فَقِيلَ: حُرِّمَتِ الخَمْرُ، فَقَالَ: اكْفِئْهَا، فَكَفَأْنَا ” قُلْتُ لِأَنَسٍ: مَا شَرَابُهُمْ؟ قَالَ: «رُطَبٌ وَبُسْرٌ» فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ: وَكَانَتْ خَمْرَهُمْ، فَلَمْ يُنْكِرْ أَنَسٌ، وَحَدَّثَنِي بَعْضُ أَصْحَابِي: أَنَّهُ سَمِعَ أَنَسًا يَقُولُ: «كَانَتْ خَمْرَهُمْ يَوْمَئِذٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.