தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6353

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ அக்கீல் ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அவர்கள் ‘சந்தையிலிருந்து) அல்லது ‘சந்தைக்கு’ என்னை அழைத்துச் சென்று உணவுப் பொருள் வாங்குவார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களும் அன்னாரைச் சந்தித்து ‘எங்களையும் (உணவு வியாபாரத்தில் கூட்டுச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் உங்களுக்காகச் சுபிட்சம் வேண்டிப் பிரார்த்தித்துள்ளார்கள்’ என் பாட்டனாரும் அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொள்வார்கள். சில வேளைகளில் ஒரு முழு ஒட்டகம் (சுமக்கும் அளவுக்கு உணவுப் பொருள்கள்) அப்படியே அவர்களுக்கு (இலாபமாக)க் கிடைக்கும். அதை (தம்) வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

Book :80

(புகாரி: 6353)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي عُقَيْلٍ

أَنَّهُ كَانَ يَخْرُجُ بِهِ جَدُّهُ عَبْدُ اللَّهِ بْنُ هِشَامٍ مِنَ السُّوقِ – أَوْ: إِلَى السُّوقِ – فَيَشْتَرِي الطَّعَامَ، فَيَلْقَاهُ ابْنُ الزُّبَيْرِ، وَابْنُ عُمَرَ، فَيَقُولاَنِ: «أَشْرِكْنَا، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ دَعَا لَكَ بِالْبَرَكَةِ» فَيُشْرِكُهُمْ، فَرُبَّمَا أَصَابَ الرَّاحِلَةَ كَمَا هِيَ، فَيَبْعَثُ بِهَا إِلَى المَنْزِلِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.