தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6359

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 நபி (ஸல்) அவர்கள் அல்லாத மற்றவர்களுக் காக ஸலவாத்’ கூறலாமா? அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அவர்களுக்காக ஸலவாத்’ கூறுவீராக! (பிரார்த்தனை செய்வீராக!) நிச்சயமாக உங்களுடைய பிரார்த்தனை அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். (9:103)

 அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

யாரேனும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலைஹி (இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக)’ என்று பிரார்த்திப்பது வழக்கம். (அவ்வாறு) என் தந்தை அபூ அவ்ஃபா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் தம் ஸகாத் பொருளைக் கொண்டுவந்தபோது, ‘அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி அபீ அவ்ஃபா’ (இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்குக் கருணை புரிவாயாக)’ என்று பிரார்த்தித்தார்கள்.

Book : 80

(புகாரி: 6359)

بَابُ هَلْ يُصَلَّى عَلَى غَيْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاَتَكَ سَكَنٌ لَهُمْ} [التوبة: 103]

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ

كَانَ إِذَا أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَدَقَتِهِ قَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ» فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ، فَقَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.