தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-661

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹுமைத் கூறினார்:

‘நபி(ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்திருந்தார்களா?’ என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘ஆம்! ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் நடுப்பகுதி வரை தாமதப் படுத்தினார்கள். அவர்கள் தொழுது முடித்த பின்னர் எங்கள் பக்கம் வந்து ‘மக்கள் தொழுதுவிட்டுத் தூங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர் பார்த்து இருக்கும் போதெல்லாம் தொழுகையில் இருந்தவர்களாகவே கருதப்படுவீர்கள்’ எனக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மோதிரம் மின்னியதை நான் இப்பொழுது பார்ப்பதுபோல் இருக்கிறது’ என்று அனஸ் (ரலி) கூறினார்.
Book :10

(புகாரி: 661)

حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، قَالَ

سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلِ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا؟ فَقَالَ: نَعَمْ أَخَّرَ لَيْلَةً صَلاَةَ العِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ بَعْدَ مَا صَلَّى، فَقَالَ: «صَلَّى النَّاسُ وَرَقَدُوا وَلَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مُنْذُ انْتَظَرْتُمُوهَا»

قَالَ: فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.