தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6706

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸியாத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார்.

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர், ‘நான் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ‘செவ்வாய் கிழமையும்’ அல்லது ‘புதன் கிழமையும்’ நோன்பு நோற்க நேர்ந்து கொண்டுள்ளேன். ஆனால், ஏதேச்சையாக இந்த நாள் ஹஜ்ஜுப் பெருநாளாக அமைந்துவிட்டது (நான் என்ன செய்வது?)’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வோ நேர்த்திக்கடனை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். (அதே நேரத்தில்) ஹஜ்ஜுப் பெருநாளில் நோன்பு நோற்கக் கூடாதென (இறைத்தூதர் மூலம்) நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் திரும்பவும் (அதே கேள்வியைக்) கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள்; கூடுதலாக எதுவும் கூறவில்லை.105

Book :83

(புகாரி: 6706)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، قَالَ:

كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ، فَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ: نَذَرْتُ أَنْ أَصُومَ كُلَّ يَوْمِ ثَلَاثَاءَ أَوْ أَرْبِعَاءَ مَا عِشْتُ، فَوَافَقْتُ هَذَا اليَوْمَ يَوْمَ النَّحْرِ، فَقَالَ: «أَمَرَ اللَّهُ بِوَفَاءِ النَّذْرِ، وَنُهِينَا أَنْ نَصُومَ يَوْمَ النَّحْرِ» فَأَعَادَ عَلَيْهِ، فَقَالَ مِثْلَهُ، لَا يَزِيدُ عَلَيْهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.