தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7180

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 (நீதிபதி முன்) ஆஜராகாதவருக்குக்கெதிராகத் தீர்ப்பளிப்பது43

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒருமுறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘(என் கணவர்) அபூ சுஃப்யான் கருமித்தனம் உள்ள ஒருவர். நான் (செலவுக்காக) அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. (அப்படிச் செய்ய எனக்கு அனுமதியுண்டா?)’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமான அளவிற்கு நியாயமான முறையில் எடுத்துக்கொள்’ என்றார்கள்.44

Book : 93

(புகாரி: 7180)

بَابُ القَضَاءِ عَلَى الغَائِبِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّ هِنْدًا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَأَحْتَاجُ أَنْ آخُذَ مِنْ مَالِهِ، قَالَ: «خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ»





மேலும் பார்க்க: புகாரி-2211 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.