தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-733

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் சுளுக்கு ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு உட்கார்ந்து தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுடன் உட்கார்ந்து தொழுதோம். தொழுது முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘இமாம் ஏற்படுத்தப் படுவது பின்பற்றப் படுவதற்கே. எனவே தக்பீர் கூறுங்கள். அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் (ருகூவிலிருந்து) நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் எனக் கூறும்போது ரப்பனா லகல் ஹம்து எனக் கூறுங்கள். அவர் ஸஜ்தாச் செய்யும்போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள்.
Book :10

(புகாரி: 733)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ

خَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَرَسٍ، فَجُحِشَ، فَصَلَّى لَنَا قَاعِدًا فَصَلَّيْنَا مَعَهُ قُعُودًا، ثُمَّ انْصَرَفَ، فَقَالَ:  إِنَّمَا الإِمَامُ – أَوْ إِنَّمَا جُعِلَ الإِمَامُ – لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.