தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-984

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுகை நடத்திவிட்டு உரை நிகழ்த்தினார்கள். தொழுகைக்கு முன் (குர்பானிப் பிராணிகளை) அறுத்தவர் மீண்டும் அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அன்ஸார்களைச் சேர்ந்த ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு வறுமை நிறைந்த அண்டை வீட்டார் உள்ளனர். (அவர்களுக்கு முன்பே நான் அறுத்து விட்டேன் என்னிடம் கொழுத்த இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?) என்று கேட்டார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
Book :13

(புகாரி: 984)

حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ

«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ النَّحْرِ، ثُمَّ خَطَبَ، فَأَمَرَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ أَنْ يُعِيدَ ذَبْحَهُ»، فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، جِيرَانٌ لِي – إِمَّا قَالَ: بِهِمْ خَصَاصَةٌ، وَإِمَّا قَالَ: بِهِمْ فَقْرٌ – وَإِنِّي ذَبَحْتُ قَبْلَ الصَّلاَةِ، وَعِنْدِي عَنَاقٌ لِي أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْ لَحْمٍ، «فَرَخَّصَ لَهُ فِيهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.