ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
7921. ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: “முஹம்மதே! நீங்கள் விரும்பும் காலம் வரை வாழலாம். ஆனால், நீங்கள் (ஒரு நாள்) மரணிப்பீர்கள். நீங்கள் விரும்பியவரை நேசித்துக் கொள்ளலாம். ஆனால், அவரை (ஒரு நாள்) நீங்கள் பிரிவீர்கள். நீங்கள் விரும்பும் செயல்களை செய்துக் கொள்ளலாம். ஆனால், அதற்குக் கூலி கொடுக்கப்படுவீர்கள்.
மேலும் அறிந்துகொள்ளுங்கள்: ஒரு இறைநம்பிக்கையாளரின் சிறப்பு அவரது இரவுத் தொழுகையில் உள்ளது. அவரது கண்ணியம், மக்களை விட்டு அவர் தேவையற்றவராக இருப்பதில் உள்ளது.
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. எனினும் புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதைப் பதிவு செய்யவில்லை.
இந்த ஹதீஸ், முஹம்மத் பின் ஹுமைத் —> ஸாஃபிர் —> பலமானவரான அபூஸுர்ஆ என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் (இதை அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்களா? அல்லது ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்களா? என்று) சந்தேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் வேறு அறிவிப்பாளர்தொடரில் இந்த சந்தேகம் இல்லை…
جَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا مُحَمَّدُ، عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَأَحْبِبْ مَنْ أَحْبَبْتَ فَإِنَّكَ مَفَارِقُهُ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مَجْزِيٌّ بِهِ» ثُمَّ قَالَ: «يَا مُحَمَّدُ شَرَفُ الْمُؤْمِنِ قِيَامُ اللَّيْلِ وَعِزُّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ»
சமீப விமர்சனங்கள்