ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
3934. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஐந்து விஷயங்களை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடினார்கள். அவர்கள் கூறுவார்கள்:
அல்லாஹ்விடம் நான் கப்ரின் வேதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும், வாழ்வு, மற்றும் மரணத்தின் சோதனையிலிருந்தும், மேலும் மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
தஹாவீ இமாம் கூறுகிறார்:
(மேற்கண்ட செய்தியில் அபூஅல்கமா என்பவரிடமிருந்து யஃலா பின் அதாஉ அறிவித்துள்ளார்.)
அபூஅல்கமா என்பவரிடமிருந்து ஸுஹ்ரா பின் மஅஃபத் என்பவரும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அந்த செய்தி:
…அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு “ஸுப்ஹானல்லாஹில் அளீம், வபிஹம்திஹி” (மகத்தான அல்லாஹ்வைத் துதித்துப் போற்றுகிறேன்) நூறு தடவையும், “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை இல்லை) நூறு தடவையும், அஸர் தொழுகைக்குப் பிறகும் அவ்வாறே நூறு தடவையும் யார் சொல்கிறாரோ, அவருடைய பாவங்கள் கடல் நுரையைப் போலிருந்தாலும் மன்னிக்கப்படும்…
அபூ அல்கமாவின் ஹதீஸை அறிவித்த முஹம்மது இப்னுல் ஹாரிஸ் யார் என்று ஒருவர் கேட்டார். அதற்கு எங்கள் பதில்: அவர் முஹம்மது இப்னுல்
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْ خَمْسٍ يَقُولُ: ” أَعُوذُ بِاللهِ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَشَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ
சமீப விமர்சனங்கள்