தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3834

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” என அதிகம் பிரார்த்திப்பார்கள். எனவே ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களை நம்பிக்கை கொண்டு, நீங்கள் கொண்டுவந்ததையும் உண்மையாக ஏற்றுள்ளோம். இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம், நிச்சயமாக உள்ளங்கள் ரஹ்மான்-அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கிடையில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(இப்னுமாஜா: 3834)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ» ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، تَخَافُ عَلَيْنَا وَقَدْ آمَنَّا بِكَ، وَصَدَّقْنَاكَ بِمَا جِئْتَ بِهِ، فَقَالَ: «إِنَّ الْقُلُوبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ يُقَلِّبُهَا» وَأَشَارَ الْأَعْمَشُ بِإِصْبَعَيْهِ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3834.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3832.




إسناد ضعيف فيه يزيد بن أبان الرقاشي وهو ضعيف زاهد

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48783-யஸீத் பின் அபான் பலவீனமானவர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-எண்-7733) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2140 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.