தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-10847

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யாஸீன் (36-வது) அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவர் மன்னிக்கப்படுவார். மேலும் உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு அதை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)

(நஸாயி: 10847)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«ويس قَلْبُ الْقُرْآنِ لَا يَقْرَؤُهَا رَجُلٌ يُرِيدُ اللهَ وَالدَّارَ الْآخِرَةَ إِلَّا غُفِرَ لَهُ، اقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10847.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10407.




  • இந்த செய்தியில் மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரும், இவரிடமிருந்து அறிவிக்கும் அவரின் மகனும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான
    அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-20300 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.