தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-5595

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

வெள்ளிக்கிழமை மரணித்தவர் பற்றி.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் வெள்ளிக்கிழமை இரவிலோ அல்லது பகலிலோ  மரணிக்கிறாரோ அவர், கப்ரின் சோதனையிலிருந்து நீங்கி விடுவார் என்றோ,

அல்லது  கப்ரின் சோதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு அவர் ஷஹீத் என்று எழுதப்படுவார் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(musannaf-abdur-razzaq-5595: 5595)

بَابُ مَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ رَجُلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ مَاتَ لَيْلَةَ الْجُمُعَةِ – أَوْ يَوْمَ الْجُمُعَةِ – بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»

أَوْ قَالَ: «وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ، وَكُتِبَ شَهِيَدًا»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5595.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-5441.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் இப்னு ஷிஹாபிடமிருந்து ஒரு மனிதர் அறிவித்தார் என்று வந்துள்ளது. அவர் யார், அவர் நம்பகத்தன்மை பற்றி விவரம் இல்லை.
  • மேலும் இப்னு ஷிஹாப் (ரஹ்) நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார். 
  • மேலும் இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்பவர். இங்கு தன் ஆசிரியரிடம் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லை.எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-6582 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.