தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2504

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!” என்று பிரார்த்தித்தபோது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (சேர்த்துப் பிரார்த்தியுங்கள்)” என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!” என்றார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்…” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (இறைவா, அருள் புரிவாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2504)

وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«اللهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» قَالُوا: وَالْمُقَصِّرِينَ؟ يَا رَسُولَ اللهِ، قَالَ: «اللهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» قَالُوا: وَالْمُقَصِّرِينَ؟ يَا رَسُولَ اللهِ، قَالَ: «وَالْمُقَصِّرِينَ»


Tamil-2504
Shamila-1301
JawamiulKalim-2301




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.